என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ராஜபாளையம் மொட்ட கோபுரம் பகுதியில் ஆட்டோ மூலம் போதை பொருள் கடத்தப்படுவதாக நேற்று நள்ளிரவில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மொட்ட கோபுரம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை அதிகாரிகள் மறித்தனர். உடனே ஆட்டோவில் இருந்த 3 பேர் கீழே இறங்கி தப்பியோடிவிட்டனர். ஆட்டோ டிரைவரை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்திய போது ஆட்டோவில் அஜிஸ் என்ற ரூ.5 கோடி மதிப்பிலான 24 கிலோ எடையுள்ள போதை பொருள் ஒரு மூட்டையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து பிடிப்பட்ட ஆட்டோ டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்கள் யார்? வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் இந்த போதை பொருள் கடத்த முயற்சி நடந்ததா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்