என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
Byமாலை மலர்21 Aug 2017 5:26 PM GMT (Updated: 21 Aug 2017 5:26 PM GMT)
காளையார்கோவில் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காளையார்கோவில்:
காளையார்கோவில் ஒன்றியம் வீரமுத்துப்பட்டி லிங்கமுத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 39 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி , சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 15 வண்டிகள் பங்கேற்றன. இதில் நகரம்பட்டி கண்ணனின் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2 -வது பரிசை தவிட்டான்பட்டி அமர்நாத் , 3-வது பரிசை தேனி கூடலூர் ராஜா ஆகியோரது வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயம் மொத்தம் 24 வண்டிகளுக்கு 2 பிரிவாக நடந்தது.
முதல் பிரிவில் முதல் பரிசை பாகனேரி அருள்ஜேசு வண்டியும், 2 -வது பரிசை கல்லல் களஞ்சி அய்யனார், 3-வது பரிசை கொட்டக்குடி கனிஷ்கா ஆகியோரது வண்டியும் பெற்றது.
2-வது பிரிவில் முதல் பரிசை சிவகங்கை இந்திரா நகர் உமர்ராவுத்தர் வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி ஜெகநாதன், 3-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு ஆகியோரது வண்டியும் பெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளையார்கோவில் ஒன்றியம் வீரமுத்துப்பட்டி லிங்கமுத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 39 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி , சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 15 வண்டிகள் பங்கேற்றன. இதில் நகரம்பட்டி கண்ணனின் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2 -வது பரிசை தவிட்டான்பட்டி அமர்நாத் , 3-வது பரிசை தேனி கூடலூர் ராஜா ஆகியோரது வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயம் மொத்தம் 24 வண்டிகளுக்கு 2 பிரிவாக நடந்தது.
முதல் பிரிவில் முதல் பரிசை பாகனேரி அருள்ஜேசு வண்டியும், 2 -வது பரிசை கல்லல் களஞ்சி அய்யனார், 3-வது பரிசை கொட்டக்குடி கனிஷ்கா ஆகியோரது வண்டியும் பெற்றது.
2-வது பிரிவில் முதல் பரிசை சிவகங்கை இந்திரா நகர் உமர்ராவுத்தர் வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி ஜெகநாதன், 3-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு ஆகியோரது வண்டியும் பெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X