என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடி தாலுகா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
தேனி:
தேனி மாவட்டம் போடி-தேவாரம் சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதில் மொத்தம் 3 தளங்கள் உள்ளன. தரை தளத்தில் இ-சேவை மையம், ஆவணங்கள், கோப்புகள் மற்றும் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு யாரும் உரிமைகோர வில்லை என்றால் அந்த வாகனங்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அலுவலகத்தை ஊழியர்கள் பூட்டி சென்றனர்.
நள்ளிரவு 10 மணி அளவில் தாலுகா அலுவலகத்தில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்தது.
இதனையடுத்து போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் பல பொருட்கள் தீ விபத்தில் எரிந்து நாசமானது. நாசமான பொருட்கள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்