search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழ்வார்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    ஆழ்வார்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    ஆழ்வார்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி. இவரது பேரன் ஜான்சன் (வயது 19). இவரது பெற்றோர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். ஜான்சனை அவரது தாத்தா அந்தோணி வளர்த்து வந்தார்.

    தற்போது ஜான்சன் பாளையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரது தாத்தா அந்தோணிக்கு வயதாகிவிட்டதால் வேலை செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு படிக்க வைத்துள்ளார்.

    இதனால் ஜான்சன், “நான் படிக்க மாட்டேன் என்றும், கூலிவேலைக்கு சென்று தாத்தாவை பார்த்துக்கொள்கிறேன்” என்றும் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது தாத்தா கண்டிப்பாக பட்டப்படிப்பு முடித்துவிட வேண்டும். என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ஜான்சனுக்கு படிப்பில் நாட்டம் செல்லாமல் சில பாடங்களில் “அரியர்ஸ்” விழுந்தது. இதில் மனம் உடைந்த ஜான்சன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வி‌ஷம் குடித்து விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ஜான்சன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார் குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×