என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையில் விடுவிக்கப்பட்ட படகுகள் முற்றிலும் சேதம்
Byமாலை மலர்20 Aug 2017 5:30 PM GMT (Updated: 20 Aug 2017 5:30 PM GMT)
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 43 படகுகளும் தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்து உள்ளன.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்களை சிறைபிடித்து வரும் இலங்கை அரசு அவ்வப்போது மீனவர்களை மட்டும் விடுதலை செய்து விட்டு, படகுகளை விடுவிக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் 43 படகுகளை மட்டும் இலங்கை அரசு விடுவித்தது. அந்த படகுகளின் நிலையை ஆய்வு செய்யவும், அங்கிருந்து படகுகளை தமிழகத்துக்கு கொண்டு வரவும் தமிழக அரசின் மீன்துறை கூடுதல் இயக்குனர் சமீரன், உதவி இயக்குனர் மணிகண்டன், மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா, மெக்கானிக் ஆல்வின் உள்பட 7 பேர் இலங்கை சென்றனர். அங்கு அவர்கள், விடுவிக்கப்பட்ட 43 படகுகளையும் ஆய்வு செய்தனர். இதில் 5 படகுகள் கடலில் மூழ்கிய நிலையிலும் மற்ற படகுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், “இலங்கையில் விடுவிக்கப்பட்ட 43 படகுகளும் தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. மூழ்கிய 5 படகுகளுக்கு முழுமையான நிவாரணமும், மற்ற படகுகளை பழுது நீக்க தேவையான உதவியை அரசே செய்து நல்லமுறையில் படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று கூறினார்.
தமிழக மீனவர்களை சிறைபிடித்து வரும் இலங்கை அரசு அவ்வப்போது மீனவர்களை மட்டும் விடுதலை செய்து விட்டு, படகுகளை விடுவிக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் 43 படகுகளை மட்டும் இலங்கை அரசு விடுவித்தது. அந்த படகுகளின் நிலையை ஆய்வு செய்யவும், அங்கிருந்து படகுகளை தமிழகத்துக்கு கொண்டு வரவும் தமிழக அரசின் மீன்துறை கூடுதல் இயக்குனர் சமீரன், உதவி இயக்குனர் மணிகண்டன், மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா, மெக்கானிக் ஆல்வின் உள்பட 7 பேர் இலங்கை சென்றனர். அங்கு அவர்கள், விடுவிக்கப்பட்ட 43 படகுகளையும் ஆய்வு செய்தனர். இதில் 5 படகுகள் கடலில் மூழ்கிய நிலையிலும் மற்ற படகுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், “இலங்கையில் விடுவிக்கப்பட்ட 43 படகுகளும் தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. மூழ்கிய 5 படகுகளுக்கு முழுமையான நிவாரணமும், மற்ற படகுகளை பழுது நீக்க தேவையான உதவியை அரசே செய்து நல்லமுறையில் படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X