search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    X

    புதுக்கோட்டை நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிணறு பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிணறு பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மகளிர் மாணவிகள் விடுதியில் சமையல் அறை, சமைக்கப்படும் உணவுகள், தங்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    மேலும் நகராட்சி பகுதியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தேர்வு கூடம் புதிதாக கட்டப்படவுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கிணறு அமைக்கும் பணியினை விரைவாக முடிக்கவும், மாணவிகள் தங்கும் விடுதிகளை தூய்மையாக பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட உத்தரவிட்டார்.
    Next Story
    ×