search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகிரி அருகே கார் மோதி வியாபாரி பலி
    X

    சிவகிரி அருகே கார் மோதி வியாபாரி பலி

    சிவகிரி அருகே கார் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உள்ளாறு கிராமத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன் (வயது 70). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை டீக்கடையை திறப்பதற்காக அவர் அப்பகுதியில் உள்ள தென்காசி-ராஜபாளையம் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சேதுபாண்டியன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் விரைந்து வந்து பலியான சேது பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×