search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லால்குடி அருகே ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி
    X

    லால்குடி அருகே ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி

    லால்குடி அருகே ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லால்குடி:

    லால்குடி ரெயில் நிலையம் அருகில் உள்ள லெவல் கிராசிங் பகுதியில் உள்ள தண்டவாளத்தை நேற்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரெயிலில் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×