என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65), கூலி தொழிலாளி.இவரது மனைவி பண்ணாரி வயது (60).
இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் நேற்றும் கணவன்- மனைவியிடம் மீண்டும் தகராறு வந்தது.
இதில் வாழ்க்கையில் வெறுப் படைந்த பண்ணாரி வீட்டிற்குள் சென்று மண்எண்ணையை எடுத்து மேலே ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டதால் தீ உடல் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி மனைவியை காப்பாற்ற அருகில் சென்ற போது அவர் மீதும் தீ பரவியது.
சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பண்ணாரி பரிதாபமாக இறந்தார். பழனிச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்