search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது
    X

    சேலத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

    வாகனத்தில் சாய்ந்து இருந்த இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் காய்கறி வியாபாரி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 39). இந்த நிலையில் முருகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் முருகனை பார்ப்பதற்காக கலைச்செல்வி வந்தார். அப்போது ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்த வாகனத்தில் அவர் சாய்ந்து இருந்தார். அங்கு வந்த வாகனத்தின் உரிமையாளர் நாராயண நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் வண்டியின் மீது கலைச்செல்வி சாய்ந்திருப்பதை கண்டு அவரை ஆபாசமாக திட்டியுள்ளார்.

    இது குறித்து கலைச்செல்வி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    Next Story
    ×