search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வாலிபர் குத்திக் கொலை
    X

    மதுரை அருகே வாலிபர் குத்திக் கொலை

    மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த வரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அப்பன்திருப்பதி அருகே உள்ள சக்கிலியன் குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்டிட தொழிலாளியான முத்து சாமி என்ற கார்த்திக் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இதன் காரணமாக 2 பேரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். சம்பவத்தன்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திர மடைந்த கார்த்திக் கத்தியால் சவுந்தர்ராஜனை குத்திவிட்டு தப்பினார்.

    படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து அப்பன் திருப்பதி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×