search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 20 பேர் அதிரடி கைது
    X

    அரியலூர் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 20 பேர் அதிரடி கைது

    அரியலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை, அனுமதி இன்றி மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை, அனுமதி இன்றி மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

    கீழமாளிகை மணிகண்டன் (வயது 24), அயன்தத்தனூர் மணிவண்ணன் (28), அரியலூர் நவநீதகிருஷ்ணன் (27), புதுப்பாளையம் ராஜா (21), புதுப்பாளையம் கருப்பையா (25), அயன்தத்தனூர் வெற்றி செல்வன் (24), கீழமாளிகை திருமுருகன் (24), ஒகளுர் பிரபு, முல்லையூர் கமலகாசன் 33), ஆதிக்குடிக்காடு ராஜா (25), ஆதிக்குடிக்காடு தமிழரசன் (25),

    காரைபாக்கம் அஜித் குமார் (19), மீன்சுருட்டி ராஜசேகர், பொன்பரப்பி பிரசாத் (25), காங்கேயன்குறிச்சி நீலமேகம் (45), செம்பியகுடி கருப்பையன் (62), இடையார் கண்ணன், சொக்கலிங்கபுரம் விமல் (27), இருங்கலாங்குறிச்சி தெய்வசிகாமணி, அதே ஊரைச் சேர்ந்த குண்டு என்ற சக்திவேல் ஆகிய 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், மணல் கனிமவளம் கடத்துவோர் மீதும், கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×