என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே ஆம்புலன்சு மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்18 Aug 2017 10:05 AM GMT (Updated: 18 Aug 2017 10:05 AM GMT)
சிவகங்கை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்சு மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
சிவகங்கை:
சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 33). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபெருமாள் (30) என்பவரும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.
வேலையை முடித்து விட்டு நேற்றிரவு 2 பேரும் ஊருக்கு திரும்பினர். சிவகங்கை அருகே உள்ள பில்லூர் விலக்கு ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சு எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுந்தரபெருமாள் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து ஆம்புலன்சு டிரைவர் ராஜாவை தேடி வருகிறார்.
சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 33). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபெருமாள் (30) என்பவரும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.
வேலையை முடித்து விட்டு நேற்றிரவு 2 பேரும் ஊருக்கு திரும்பினர். சிவகங்கை அருகே உள்ள பில்லூர் விலக்கு ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சு எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுந்தரபெருமாள் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து ஆம்புலன்சு டிரைவர் ராஜாவை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X