search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் ஆசிரியை வீட்டில் பணம் கொள்ளை
    X

    தஞ்சையில் ஆசிரியை வீட்டில் பணம் கொள்ளை

    தஞ்சையில் ஆசிரியை வீட்டில் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை தியாகி வேல் நகரை சேர்ந்தவர் அருள் தாஸ். இவரது மகள் ஆரோக்கிய ஜெரோலின் சத்யா (24). புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்தார். இதற்காக மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. ரூ. 35 ஆயிரம் வரை பணம் வசூல் ஆனது.

    இந்த பணத்தை தனது பையில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த ஆரோக்கிய ஜெரோலின் சத்யா அங்கு ஜன்னல் அருகே வைத்திருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமி நேற்று இரவு அங்கு வந்து கம்பி மூலம் பையை எடுத்து கொண்டு தப்பி ஓடி விட்டான். இன்று காலை பணப்பை காணாமல் போனது பார்த்து ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை எடுத்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×