search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பலத்தில் திருமணத்துக்கு மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    மாம்பலத்தில் திருமணத்துக்கு மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபர் கைது

    மாம்பலத்தில் திருமணத்துக்கு மறுத்த பெண்ணை தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சுமதி. இவரது மகள் காயத்ரி (22).

    சுமதியின் கணவர் ஏற்கனவே பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சுமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சத்திய நாராயணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் சத்தியநாராயணன் காயத்ரி மீதும் ஆசைப்பட்டார்.

    மேலும் காயத்ரியை திருமணம் செய்து கொடுக்கும்படியும் கேட்டார். இதற்கு காயத்ரி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியநாராயணன் கடந்த சில மாதங்களாகவே காயத்ரியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அவரை காயத்ரி கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் தி.நகர் பர்கிட் ரோடு வழியாக காயத்ரி நடந்து சென்றார். பின்தொடர்ந்து வந்த சத்திய நாராயணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் காயத்ரியின் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டான்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த காயத்ரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து துணை கமி‌ஷனர் அரவிந்தன் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் செல்வன் தலைமையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த சத்திய நாராயணனை போலீசார் கைது செய்தனர். காயத்ரியை வெட்டிய சுமார் 2 மணி நேரத்தில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×