search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்து அறுத்த கணவர் கைது
    X

    நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்து அறுத்த கணவர் கைது

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவான்மியூர்:

    மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை ராஜலட்சுமி தெருவை சேர்ந்தவர் கார்த்திக், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சங்கீதா (வயது 22).

    மனைவியின் நடத்தையில் கார்த்திக் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணி அளவில் எழுந்த கார்த்திக் திடீரென அருகில் கிடந்த கத்தியால் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் கழுத்தை அறுத்தார்.

    ரத்தவெள்ளத்தில் இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்தனர். உடனே கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உயிருக்கு போராடிய சங்கீதாவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதே பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக்கை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×