search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே கார் விபத்தில் பெண் பலி
    X

    தர்மபுரி அருகே கார் விபத்தில் பெண் பலி

    சாலையை கடக்க முயன்றபோது கார் மோதிய விபத்தில் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே பெரியமல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மா (வயது 70). இவர் தர்மபுரியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று வேலை முடித்து விட்டு வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் திரும்பினார்.

    அப்போது பெரியமல்லிபட்டி பிரிவு ரோடு வந்தபோது ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டிற்கு ரோட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த பெரியம்மாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
    Next Story
    ×