என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கப்பலூர் அருகே டாஸ்மாக் கடைக்கு திருட சென்ற மாணவர்கள் மதுகுடித்து மயங்கினர்
Byமாலை மலர்16 Aug 2017 12:02 PM GMT (Updated: 16 Aug 2017 12:02 PM GMT)
கப்பலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மாணவர்கள், மது போதையில் அங்கேயே படுத்து தூங்கினார்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், கப்பலூரில் இருந்து விமான நிலையம் செல்லும் வழியில் புளியங்குடி கிராமம் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திருடும் நோக்கத்தில் டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு மதுபாட்டில்களை பார்த்ததும் அவர்களது எண்ணம் மாறியது. 2 பேரும் கடையினுள் அமர்ந்து ஆசை தீர மது குடித்தனர். அளவுக்கு அதிகமாக குடித்ததால் போதையில் 2 பேரும் அங்கேயே மயங்கினர்.
இந்நிலையில் மறுநாள் மதியம் டாஸ்மாக் கடையை திறக்க வந்த விற்பனையாளர் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது 2 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கப்பலூர் ராஜமணி மகன் தீபன்ராஜ் என்றும், மற்றொருவர் பழக்காபுதுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அஸ்வின்குமார் எனவும் தெரியவந்தது.
தீபன்ராஜ் அரசு பள்ளியில் பிளஸ்-2வும், அஸ்வின் குமார் கல்லூரியிலும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம், கப்பலூரில் இருந்து விமான நிலையம் செல்லும் வழியில் புளியங்குடி கிராமம் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திருடும் நோக்கத்தில் டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு மதுபாட்டில்களை பார்த்ததும் அவர்களது எண்ணம் மாறியது. 2 பேரும் கடையினுள் அமர்ந்து ஆசை தீர மது குடித்தனர். அளவுக்கு அதிகமாக குடித்ததால் போதையில் 2 பேரும் அங்கேயே மயங்கினர்.
இந்நிலையில் மறுநாள் மதியம் டாஸ்மாக் கடையை திறக்க வந்த விற்பனையாளர் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது 2 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கப்பலூர் ராஜமணி மகன் தீபன்ராஜ் என்றும், மற்றொருவர் பழக்காபுதுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அஸ்வின்குமார் எனவும் தெரியவந்தது.
தீபன்ராஜ் அரசு பள்ளியில் பிளஸ்-2வும், அஸ்வின் குமார் கல்லூரியிலும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X