search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே வி‌ஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை
    X

    ராசிபுரம் அருகே வி‌ஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

    ராசிபுரம் அருகே வி‌ஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள பொன்குறிச்சி ஊராட்சி கோப்பம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செல்வ ராஜ் மகன் வடிவேல்(31). இவர் சென்டிரிங் தொழிலுக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் திருமணமாகாத காரணத்தால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த வடிவேல் ஒடுவன் தழையை அரைத்து குடித்துள்ளார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் வடிவேலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த வடிவேல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×