என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே வீடு புகுந்து 37 பவுன் நகைகள் கொள்ளை
Byமாலை மலர்15 Aug 2017 4:26 PM GMT (Updated: 15 Aug 2017 4:26 PM GMT)
தேனி அருகே வீடு புகுந்து 37 பவுன் நகைகள் கொள்ளையடித்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. நகர் பின்புறம் முத்துநகரில் வசித்து வருபவர் அழகுராஜா. இவர் காமாட்சிபுரத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கன்னிகா (31). இவர்களது வீட்டில் இருந்த 37 பவுன், 2 கிராம் தங்க நகைகள் கொள்ளை போயின.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அழகுராஜா புகார் அளித்தார். கொள்ளை நடந்த காலமான கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இவர்களது வீட்டிற்கு வந்தவர்கள் யார்? யார்? என விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பரமன் மனைவி இந்திரா, கன்னிகாவின் தோழியான போடியை சேர்ந்த மணிவண்ணன் மனைவி புனிதா, எலக்டிரிசியன் தர்மர் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள்தான் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. நகர் பின்புறம் முத்துநகரில் வசித்து வருபவர் அழகுராஜா. இவர் காமாட்சிபுரத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கன்னிகா (31). இவர்களது வீட்டில் இருந்த 37 பவுன், 2 கிராம் தங்க நகைகள் கொள்ளை போயின.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அழகுராஜா புகார் அளித்தார். கொள்ளை நடந்த காலமான கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இவர்களது வீட்டிற்கு வந்தவர்கள் யார்? யார்? என விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பரமன் மனைவி இந்திரா, கன்னிகாவின் தோழியான போடியை சேர்ந்த மணிவண்ணன் மனைவி புனிதா, எலக்டிரிசியன் தர்மர் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள்தான் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X