என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்15 Aug 2017 10:31 AM GMT (Updated: 15 Aug 2017 10:31 AM GMT)
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தவர் உள்பட இரண்டு வாலிபர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாமல்லபுரம்:
சேலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் குடும்பத்துடன் மாம்மல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.
அனைவரும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை கார்த்திக்கை கடலுக்குள் இழுத்து சென்றது. உறவினர்களால் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் பட்டிப்புலம் அருகே கார்த்திக் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் முகமது சலீம் (34). இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தார். பின்னர் கடலில் குளித்தார். ராட்சத அலையில் சிக்கிய முகமது சலீம் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் கடற்கரை கோவில் அருகே கரை ஒதுங்கியது.
தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடலில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் குடும்பத்துடன் மாம்மல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.
அனைவரும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை கார்த்திக்கை கடலுக்குள் இழுத்து சென்றது. உறவினர்களால் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் பட்டிப்புலம் அருகே கார்த்திக் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் முகமது சலீம் (34). இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தார். பின்னர் கடலில் குளித்தார். ராட்சத அலையில் சிக்கிய முகமது சலீம் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் கடற்கரை கோவில் அருகே கரை ஒதுங்கியது.
தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடலில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X