search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 31-ந்தேதி விநாயகர் ஊர்வலம்: இந்து மக்கள் கட்சி முடிவு
    X

    புதுவையில் 31-ந்தேதி விநாயகர் ஊர்வலம்: இந்து மக்கள் கட்சி முடிவு

    புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை 31-ந்தேதி ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவையில் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு நிர்வாகிகள் குழுவை தேர்வு செய்வது.

    * புதுவையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள், அன்னதானம் செய்வது.

    * விநாயகர் சிலைகளை 31-ந்தேதி மதியம் 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பது.

    * விநாயகர் சிலை அமைக்கும் பணிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் விநாயகர் ஊர்வலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்வது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×