search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    திருச்சி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    திருச்சி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி புத்தூரை சேர்ந்த மணிவண்ணன்(வயது 24), திருச்சி குமரன்நகரை சேர்ந்த பாண்டீஸ்வரன்(24) ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி பொன்மலை கம்பிகேட் அருகே போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 2 பேரும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், அரியமங்கலம் மற்றும் உறையூர் போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் உள்ளது.

    தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் அருண் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி சிறையில் உள்ள 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    Next Story
    ×