என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதலியார்பேட்டையில் மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
முதலியார்பேட்டை ஆண்டியார்தோப்பை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது43), கூலித்தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
திருநாவுக்கரசு வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து வந்ததால் மனைவி சித்ரா கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று திருநாவுக்கரசு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சித்ரா திருநாவுக்கரசிடம் தினசரி குடித்துவிட்டு வருகிறீர்களே மகளுக்கு திருமணம் செய்ய வேண்டாமா என்று திட்டினார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியிடம் கோபித்து கொண்டு வண்ணான்குளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று அங்கு திருநாவுக்கரசு மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வெளியே சென்று இருந்த திருநாவுக்கரசின் தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து தூக்கில் இருந்து திருநாவுக்கரசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திருநாவுக்கரசு இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தாய் குப்பம்மாள் முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்