என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லாபுரம்: தீ சேலையில் பற்றியதில் படுகாயம் அடைந்த பெண் பலி
Byமாலை மலர்14 Aug 2017 10:35 AM GMT (Updated: 14 Aug 2017 10:35 AM GMT)
வில்லாபுரத்தில் கோவில் விளக்கு தீ சேலையில் பற்றி எரிந்த விபத்தில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் திருஞானம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 58).
சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி வரும்போது அங்கிருந்த விளக்கு தீ கலைச்செல்வியின் சேலையில் பற்றியது.
இதை பார்த்த பக்தர்கள் தீயை அணைத்து கலைச்செல்வியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் திருஞானம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 58).
சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி வரும்போது அங்கிருந்த விளக்கு தீ கலைச்செல்வியின் சேலையில் பற்றியது.
இதை பார்த்த பக்தர்கள் தீயை அணைத்து கலைச்செல்வியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X