search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே வேலைக்கு அனுப்ப மறுத்ததால் இளம் பெண் தற்கொலை
    X

    பாபநாசம் அருகே வேலைக்கு அனுப்ப மறுத்ததால் இளம் பெண் தற்கொலை

    பாபநாசம் அருகே வேலைக்கு அனுப்ப மறுத்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள வடகுவளவேலி நெடுந்தெருவை சேர்ந்த செல்லத்துரை மகள் புனிதா (வயது-19) இவர் ஈரோடு பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறி உள்ளார். அதற்கு அவர்கள் அனுமதி கொடுக்க வில்லை. இதனால் மனமுடைந்த புனிதா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் அரித்துவாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×