search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது: சுப்பிரமணிய சாமி
    X

    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது: சுப்பிரமணிய சாமி

    அ.தி.மு.க. ஆட்சியை யார் நினைத்தாலும் கலைக்க முடியாது என பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும். யார் நினைத்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது.

    நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்க அளிக்கக்கோரிய அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×