என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் டிரைவர் பலி: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ‘ஸ்டிரைக்’
Byமாலை மலர்14 Aug 2017 7:15 AM GMT (Updated: 14 Aug 2017 7:15 AM GMT)
சென்னை துறைமுகத்துக்குள் நடந்த சென்ற டிரைவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் பரணிராஜ் (வயது 26). கண்டெய்னர் லாரி டிரைவர். நேற்று இரவு அவர் சென்னை துறைமுகத்துக்குள் நடந்து சென்றார்.
அப்போது, துறைமுகத்துக்குள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பரணி ராஜ் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
விபத்து நடந்த இடத்தில் கண்காணிப்பு காமிரா இல்லாததால் விபத்து ஏற்படுத்திய வாகனம் பற்றிய விபரம் தெரியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர்கள் சென்னை துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் மறுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். துறைமுகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும்.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கால் துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் பரணிராஜ் (வயது 26). கண்டெய்னர் லாரி டிரைவர். நேற்று இரவு அவர் சென்னை துறைமுகத்துக்குள் நடந்து சென்றார்.
அப்போது, துறைமுகத்துக்குள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பரணி ராஜ் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
விபத்து நடந்த இடத்தில் கண்காணிப்பு காமிரா இல்லாததால் விபத்து ஏற்படுத்திய வாகனம் பற்றிய விபரம் தெரியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர்கள் சென்னை துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் மறுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். துறைமுகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும்.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கால் துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X