என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி: ஊழியர் தலைமறைவு
புதுச்சேரி:
புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் சாரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பணம் வசூலிப்பாளராக வேலை செய்து வந்தார்.
இவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மீதி தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிதி நிறுவனத்தின் துணை மேலாளர் சரவணபவன் பெரியக்கடை போலீசில் புகார் செய்த போது இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதையடுத்து சரவணபவன் புதுவை கோர்ட்டில் மோசடி செய்த ஊழியர் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, புகார்தாரரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரியக்கடை போலீசுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பெரியக் கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மோசடி வழக்கு பதிவு செய்து நாகராஜை தேடினார். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து நாகராஜை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்