என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் இருந்து சென்னைக்கு மினிவேனில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அனிச்சங்குப்பம் கலால் சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினிவேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வேனில் லோடு ஏற்றிச்செல்வது போல் தார்ப்பாயினால் மூடப்பட்டு இருந்ததை பிரித்து பார்த்த போது அதில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது. அதில் 4272 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள், 120 பீர்பாட்டில் உள்பட 4668 பிராந்தி பாட்டில்கள் இருந்தது.
இதையடுத்து மினிவேனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புதுப்பட்டு ரங்கநாதன் நகரை சேர்ந்த முனியாண்டி (வயது36) என்பதும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து முனியாண்டியை கைது செய்த போலீசார் மதுப்பாட்டில்களையும், மினிவேனையும் மரக்காணம் கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்