என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்11 Aug 2017 10:23 AM GMT (Updated: 11 Aug 2017 10:23 AM GMT)
கடலூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற யாசிம் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர்அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் குணமாகாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X