search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

    குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பெரியபாளையம்-ஆவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 8 மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவது பாதிக்கப்பட்டது.

    கடந்த 2 மாதமாக ஒரு தொட்டியில் மட்டும் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக அந்த மின் மோட்டாரும் இயக்கவில்லை. இதனால் தண்ணீர் சப்ளை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    இது குறித்து எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பெரியபாளையம்-ஆவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரிபூரணம், சந்திரசேகர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×