என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு எருமை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து சேதம் ஏற்படுத்தி செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் பாம்பார்புரம் ரோட்டில் வருவாய் மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான ஓய்வு இல்லங்கள் உள்ளன. இதனையொட்டி பாம்பே சோழா எனும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக வனத்துறையினருக்கு சொந்தமான ஓய்வு இல்லம் அருகே சிறுத்தை நடமாடி வருவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நாய்கள் அடிக்கடி மாயமாகி வருகின்றன. இந்த நாய்களை சிறுத்தைகள் துரத்தி வேட்டையாடி இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடுகளில் கட்டிவைத்துள்ள ஆடுகளை சிறுத்தைகள் கடித்து கொன்றன. அதேபோல தற்போது நாய்களை அடித்து கொன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக இரவு நேரங்களில் பாம்பார்புரம் ரோட்டை பயன்படுத்தாமல் அப்சர்வேட்டரி ரோட்டை பயன் படுத்துகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்