என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பெயர் பதிவு செய்ய இணையதள வசதி
Byமாலை மலர்4 Aug 2017 11:32 AM GMT (Updated: 4 Aug 2017 11:32 AM GMT)
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதள வசதி மூலம் மாணவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்பு துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வரவேண்டும்.
பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் (26.7.2017 முதல் 9.8.2017 முடிய) மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளான 26.7.2017 அன்றைய தேதியே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்குலேசன் வழி பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்பு துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வரவேண்டும்.
பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் (26.7.2017 முதல் 9.8.2017 முடிய) மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளான 26.7.2017 அன்றைய தேதியே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்குலேசன் வழி பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X