என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரியாங்குப்பத்தில் சத்து மாவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
பாகூர்:
புதுவை தேங்காய்திட்டு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யனார். (வயது 55). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து அரியாங்குப்பத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
உறவினர்கள் பலமுறை வலியுறுத்தியும் அய்யனார் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார். தான் இறந்தால் மட்டும் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லட்டும் என்று உறவினர்களிடம் அய்யனார் கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அய்யனார் அரியாங்குப்பம் அம்பேத்கார் நகர் மாஞ்சாலை பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகில் ஆர்லிக்ஸ் (சத்து மாவு) பாட்டிலும், வயலுக்கு பயன்படுத்தும் பூச்சு கொல்லி மருந்தும் கிடந்தது. அய்யனார் ஆர்லிக்சில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்