search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளம் அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவி கற்பழிப்பு
    X

    ஆலங்குளம் அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவி கற்பழிப்பு

    ஆலங்குளம் அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கற்பழித்த மினி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர் குளத்தை சேர்ந்தவர் மாலா(வயது19). கல்லூரி மாணவி. பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் தினமும் மினி பஸ்சில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அப்போது மினி பஸ் கண்டக்டர் மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த கணேசன்(23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மாலா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த கணேசன் அங்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த மாலாவை கணேசன் திருமண ஆசை காட்டி கறபழித்ததாக தெரிகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு மாலா வலியுறுத்தினார்.

    அதற்கு கணேசன் மறுத்ததோடு மாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி மாலா வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
    Next Story
    ×