என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே விபத்து: தாய்-மகள் உடல் நசுங்கி பலி
Byமாலை மலர்3 Aug 2017 10:39 AM GMT (Updated: 3 Aug 2017 10:39 AM GMT)
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தாய், மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. விவசாயி. இவரது மனைவி சுந்தரி (வயது 27). இவர்களுக்கு சஷ்டா(7), வேல்விழி(4), பூஜா (1) என்று 3 மகள்கள் இருந்தனர்.
நேற்று இரவு ரஜினி தனது மனைவி சுந்தரி மற்றும் பூஜாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவெண்ணைநல்லூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பையூருக்கு திரும்பினார்.
தொட்டிகுடிசை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்த போது, அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திடீரென்று ரஜினி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயடைந்த ரஜினி உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சுந்தரியும், பூஜாவும் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தாய்-மகள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. விவசாயி. இவரது மனைவி சுந்தரி (வயது 27). இவர்களுக்கு சஷ்டா(7), வேல்விழி(4), பூஜா (1) என்று 3 மகள்கள் இருந்தனர்.
நேற்று இரவு ரஜினி தனது மனைவி சுந்தரி மற்றும் பூஜாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவெண்ணைநல்லூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பையூருக்கு திரும்பினார்.
தொட்டிகுடிசை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்த போது, அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திடீரென்று ரஜினி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயடைந்த ரஜினி உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சுந்தரியும், பூஜாவும் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தாய்-மகள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X