search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் இந்து அமைப்பினர் கொலை: புதுவை பா.ஜனதா நிர்வாகிகள் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு
    X

    கேரளாவில் இந்து அமைப்பினர் கொலை: புதுவை பா.ஜனதா நிர்வாகிகள் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு

    கேரளாவில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், புதுவை மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா பொதுச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க. விக்ரமன் ஆகியோர் புதுவை காவல்துறை டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் சமீப காலமாக இந்து அமைப்பினர் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்து இந்து அமைப்பினர் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவை யூனியன் பிரதேசம். 4 பிராந்தியங்களை உள்ளடக்கி உள்ளது. இதில், மாகி பிராந்தியம் கேரளாவிலும், ஏனாம் பிராந்தியம் ஆந்திராவிலும் உள்ளது.

    புதுவை மாநில பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினர் கட்சி வளர்ச்சிக்காக அனைத்து பிராந்தியங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது.

    எனவே, பாரதிய ஜனதா கட்சியின் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள், இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×