search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலாங்கரை கடற்கரையில் பெண்களிடம் சில்மி‌ஷம்: வாலிபர் கைது
    X

    நீலாங்கரை கடற்கரையில் பெண்களிடம் சில்மி‌ஷம்: வாலிபர் கைது

    நீலாங்கரை கடற்கரையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த கோவையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவான்மியூர்:

    நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பெண்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர்களிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறி சில்மி‌ஷம் செய்தார்.

    பெண்கள் கூச்சலிட்டதால் அந்த வாலிபர் தப்பி ஓடியபோது சில பெண்கள் அவரை செல்போனில் படம் பிடித்தனர். அந்த படத்தை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் நீலாங்கரை பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு பெண்களிடம் சில்மி‌ஷம் செய்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர் கோவையைச் சேர்ந்த அஸ்வந்த் என்பதும் பெருங்குடியில் தங்கி ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரிந்தது. அவர் மீது நடைபயிற்சி சென்ற பெண்களிடம் சில்மி‌ஷம் செய்ததாக திருவான்மியூர், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அஸ்வந்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×