search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை: கம்யூனிஸ்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 15 பேர் கைது
    X

    தஞ்சை: கம்யூனிஸ்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 15 பேர் கைது

    தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராஜேஷ் படுகொலையை கண்டித்தும், கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நீதி கேட்கவும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவசேனா இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கணேஷ் பாபு தலைமையில் 15 பேர் அரண்மனை அருகில் உள்ள கம்யூனிஸ்டு அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

    அப்போது சீண்டாதே, தீண்டாதே தேச பக்தர்களை தீண்டாதே என்று கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர். அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்பு போலீசார் கலைந்து செல்லுமாறு சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×