search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பல பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
    X

    புதுவையில் பல பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது

    புதுவையில் பல பெண்களிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பகுதிக்குட்பட்ட ரெட்டியார் பாளையம், மேட்டுப்பாளையம், கோரிமேடு பகுதிகளில் செயின் பறிப்புகள் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அடிக்கடி நடந்து வந்தன.

    இதையடுத்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் உத்தரவின் பேரில் திருடர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். எஸ்.பி. தலைமையிலான ஒரு போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில் புதுவை கொசப்பாளையத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது.

    அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.

    அவர்கள் புதுவையில் ரெட்டியார் பாளையம் பகுதியில் 2 பெண்களிடமும், தட்டாஞ்சாவடி மற்றும் கவுண்டன்பாளையம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடு பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்தனர். தப்பி ஓடிய சூர்யாவை தேடி வருகிறார்கள்.

    அரவிந்த் மற்றும் மணிகண்டன் கொடுத்த தகவல் அடிப்படையில் 14½ பவுன் நகை மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்களை பிடித்த மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜு, பாலா, ராஜவேலு, ஹரிகரன், ஹரிபிரசாத் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் பாராட்டினார்.

    Next Story
    ×