என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
வில்லியனூர்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வில்லியனூர் அருகே ஜி.என். பாளையத்தில் தங்கி கணவரை இழந்த வளர்மதி என்ற பெண்ணுடன் குடும்பம்நடத்தி வந்தார். சமையல் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று வளர்மதியுடன் செல்வராஜ் சேத்தியாதோப்பில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வளர்மதியை சாமிதரிசனம் செய்து மறுநாள் வரும்படி கூறிவிட்டு செல்வராஜ் மட்டும் வீடு திரும்பினார்.
இன்று காலை வளர்மதி வீடு திரும்பினார். அப்போது செல்வராஜ் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து செல்வராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்