search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வில்லியனூர் அருகே ஜி.என். பாளையத்தில் தங்கி கணவரை இழந்த வளர்மதி என்ற பெண்ணுடன் குடும்பம்நடத்தி வந்தார். சமையல் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று வளர்மதியுடன் செல்வராஜ் சேத்தியாதோப்பில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வளர்மதியை சாமிதரிசனம் செய்து மறுநாள் வரும்படி கூறிவிட்டு செல்வராஜ் மட்டும் வீடு திரும்பினார்.

    இன்று காலை வளர்மதி வீடு திரும்பினார். அப்போது செல்வராஜ் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து செல்வராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×