search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டுக்கோட்டையில் அரவை மில்லில் தீ விபத்து
    X

    பட்டுக்கோட்டையில் அரவை மில்லில் தீ விபத்து

    பட்டுக்கோட்டையில் அரவை மில்லில் தீ விபத்தில் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை விவேகானந்த நகரை சேர்ந்தவர் கோபு. இவருக்கு சொந்தமான அரவை மில் பட்டுக்கோட்டை பண்ணைவயல் சாலையில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3½ மணி அளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரவை மில்லில் தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதனை கண்டலோடு மேன்கள் தீ மேலும் பரவாமல் அனைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அச்சம் அடைந்த அவர்கள் தீ விபத்து குறித்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரல் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் அரவை மில் முற்றிலும் எரிந்து சேதமானது. அங்கு வைக்கப்பட்டு இருந்த அரவை எந்திரங்களுக்கான ஏராளமான உதிரி பாகங்கள் எரிந்துவிட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டதாக மில் உரிமையாளர் கோபு தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் அருகில் உள்ள கடைகள் தீ விபத்தில் இருந்து தப்பின. அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தப்பினர். இந்த தீ விபத்து பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது பற்றிய புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீசார் தீ விபத்தில் எரிந்த அரவை மில்லை பார்வையிட்டு தீ விபத்துக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். தீ விபத்து பற்றி அறிந்த பொதுமக்கள் அரவை மில்லை பார்த்து சென்றனர்.

    Next Story
    ×