என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூர்-பாங்காக் செல்ல முயன்ற சென்னை பயணிகள் 2 பேரிடம் ரூ.9 லட்சம் பிடிபட்டது
Byமாலை மலர்28 July 2017 10:26 AM GMT (Updated: 28 July 2017 10:26 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் பாங்காக் செல்ல முயன்ற பயணிகள் 2 பேரிடம் இருந்து வெளிநாட்டு பணம் ரூ.9 லட்சம் பிடிப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையை சேர்ந்த அயூப்கான் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பிடிபட்டது.
அவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல முயன்றார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பாங்காக் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த பயணியை சோதனை செய்த போது அவர் சுற்றுலா விசா வைத்திருந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.3 லட்சம் வெளிநாட்டு பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையை சேர்ந்த அயூப்கான் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பிடிபட்டது.
அவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல முயன்றார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பாங்காக் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த பயணியை சோதனை செய்த போது அவர் சுற்றுலா விசா வைத்திருந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.3 லட்சம் வெளிநாட்டு பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X