search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை எம்.ஐ.டி.க்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
    X

    சென்னை எம்.ஐ.டி.க்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    சென்னை எம்.ஐ.டி.க்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை எம்.ஐ.டி.க்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், விஞ்ஞானிகள் என்று அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெற்றிருக்கும் அணு விஞ்ஞானியான டாக்டர் அப்துல் கலாம், ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

    வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம் ஆகியவற்றில் இந்தியா வியத்தகு முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாணவர்கள் மத்தியில் தனது இறுதி நாட்கள் வரை அவர் பயணித்து வந்தார்.

    டாக்டர் அப்துல்கலாம் வகுத்துக்கொடுத்த நேர்மை, எளிமை, யாரும் சென்று எளிதில் சந்திக்கும் வாய்ப்பு, அனைத்திற்கும் மேலாக எல்லாத் தரப்பு மக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளிட்ட பண்புகள், இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாலப்பாடமாக இருக்கிறது.

    அப்துல்கலாமுக்கு ராமேசுவரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றாலும், சென்னையில் உள்ள எம்.ஐ.டி.,க்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்ட வேண்டும் என்று ஏற்கனவே தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.

    இந்த இரண்டாவது நினைவுநாளில், இளைய சமுதாயத்தின் விடி வெள்ளியாகத்திகழும் அப்துல்கலாமுக்கு தி.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்துகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×