search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
    X

    கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், மதச்சார்பற்ற தன்மையை கடைபிடிக்க வேண்டும், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களுக்கு எதிராக செயல்படும் திட்டங்களை கைவிட வேண்டும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை நீக்க வேண்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் காரைக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நகர செயலாளர் கருப்பையா தலைமையிலான கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணாசிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் கருப்பையா, மாதர் சங்க பொறுப்பாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் புதுவயலில் சாலை மறியல் செய்த இளைஞர் பெறுமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி, மாவட்ட குழு உறுப்பினர் மணக்குடி சிதம்பரம் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மானாமதுரையில் முன்னாள் மாநில தலைவர் தங்கமணி, ஒன்றிய செயலாளர் முத்தையா ஆகியோர் தலைமையில் கட்சியினர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் அவர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்புவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×