search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
    X

    சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

    சீர்காழி அரசு மருத்துவ‌மனை வளாகத்தினுள் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை மாவட்ட செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் ரோட்டரி போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புகள் நிதியளிப்புகள் மூலம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தின் பக்கவாட்டிலும்,ஆண்கள் புறநோயாளிகள் கட்டிடத்தின் எதிர்புறம் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் கழிவுநீரில் மருத்துவமனைக்கு குப்பைகள், கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.

    மகப்பேறு மருத்துவமனை பக்கவாட்டில் இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரால் பிரசவித்த தாய்மார்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. கழிவுநீர் துர் நாற்றத்தினால் மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள ஜன்னல்களை திறந்து வைக்க முடியவில்லை. இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு காற்றோட்ட வசதி இல்லாத நிலையும் உள்ளது. இதேபோல் மருத்துவமனை சமையலறையிலிருந்து வெளியேற்றபடும் கழிவுநீரும் தொட்டிக்கு செல்லாமல் பரந்து விரிந்துள்ள வளாகத்தினுள் வெளியில் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள் மற்றும் உடன் வரும் அவர்களது குடும்பத்தினர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா கூறுகையில், சீர்காழி அரசு மருத்துவ‌மனை வளாகத்தினுள் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயநிலை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் மருத்துவமனை வளாகத்தினுள் துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொது மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. மருத்துவமனைக்கு அடுத்தடுத்து புதிய கட்டிடங்கள் வந்தாலும், மேம் படுத்தப்பட்டாலும், கழிவுநீர் தேங்கி நிற்பதை இதுவரை எந்த அதிகாரிகளும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் மின்நிறுத்தம் ஏற்பட்டால் உபயோகிக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான ஜெனரேக்டர் அமைக்கப்பட்டு அதற்கான தகரகூரை போடப்பட்டும் உள்ளது. ஆனால் ஜெனரேக்டர் எப்போழுதும் மழை,வெயிலில் கிடப்பில் உள்ளது என்றார். விடுதலை சிறுத்தைகள் முகாம் அமைப்பாளர் சந்திர மோகன் கூறுகையில், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மருத்துவமனை தரம் மேம்படுத்தப்பட்டாலும் வளாகத்தினுள்ளேயே குப்பைகள் கொட்டி எடுக்கப்படாமல் வைக்கப்படுள்ளன.

    பால் அளவு குறைவு இதேபோல் அறுவை சிகிச்சை செய்தவர்கள், பிரசவித்த தாய்மார்கள் என 120-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு வழங்கூடிய காலையில் வழங்ககுடிய பாலின் அளவு குறைவாக உள்ளது. அதேபோல் முட்டை, கொண்டை கடலை ஆகியவை வழங்கப்படுவதில்லை, இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. என்றார்.
    Next Story
    ×