search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லி அருகே வாலிபர் எரித்துக் கொலை
    X

    பூந்தமல்லி அருகே வாலிபர் எரித்துக் கொலை

    பூந்தமல்லி அருகே வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஒரு கார் ‘ஷோரூம்’ உள்ளது. அதன் எதிரே ஒரு காலி மைதானம் உள்ளது.

    இன்று அதிகாலை அங்கு ஒரு ஆண் பிணம் எரிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அது குறித்து பூந்தமல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த பிணத்தை கைப்பற்றினர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் எரிந்து கொண்டிருந்த நபருக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. முகம் எரிந்த நிலையில் இருந்தது.

    இதனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது போன்ற விவரங்கள் தெரிய வில்லை. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர் எங்கு வைத்து கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை.

    இவரை அங்கு வைத்து கொன்று பிணம் எரிக்கப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு பிணத்தை இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்டவரின் முகம் கருகிவிட்டதால் ‘சந்தேக மரணம்’ என பூந்தமல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரியாத நிலையில் அவர் வட இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    காணாமல் போனவர்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டவர்களின் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×