என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பூந்தமல்லி அருகே வாலிபர் எரித்துக் கொலை
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஒரு கார் ‘ஷோரூம்’ உள்ளது. அதன் எதிரே ஒரு காலி மைதானம் உள்ளது.
இன்று அதிகாலை அங்கு ஒரு ஆண் பிணம் எரிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அது குறித்து பூந்தமல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த பிணத்தை கைப்பற்றினர்.
பின்னர் நடத்திய விசாரணையில் எரிந்து கொண்டிருந்த நபருக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. முகம் எரிந்த நிலையில் இருந்தது.
இதனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது போன்ற விவரங்கள் தெரிய வில்லை. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர் எங்கு வைத்து கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை.
இவரை அங்கு வைத்து கொன்று பிணம் எரிக்கப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு பிணத்தை இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவரின் முகம் கருகிவிட்டதால் ‘சந்தேக மரணம்’ என பூந்தமல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரியாத நிலையில் அவர் வட இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
காணாமல் போனவர்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டவர்களின் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்