search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி
    X

    மத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

    மத்தூர் அருகே துணி துவைத்து கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் தண்ணீர் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை அருகில் வசித்து வருபவர்  லிங்கேஸ்வரன். இவரது மகள் செவ்வந்தி (வயது 11). இவள் ஓட்டப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த செவ்வந்தி நேற்று பள்ளி சீருடை மற்றும் துணிகளை துவைப்பதற்காக பெனுகொண்டாபுரம் ஏரி அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு கரையில் அமர்ந்து துணிகளை துவைத்து கொண்டிருந்தபோது  செவ்வந்தி திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாதது என தெரிகிறது. 

    நீச்சல் தெரியாததால் தண்ணீர் மூழ்கி மாணவி செவ்வந்தி பரிதாபமாக இறந்தாள்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உடனே கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மாணவி இறந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×