என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வினாடிக்கு 1279 கனஅடி தண்ணீர் வருகை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 50.52 அடி
Byமாலை மலர்24 July 2017 11:55 AM GMT (Updated: 24 July 2017 11:55 AM GMT)
ஊட்டி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1279 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் 50.52 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஊட்டிமலை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததையொட்டி பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியது. அணைக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஊட்டி மலையில் தற்போது மழை பெய்வது நின்றுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் படிப்படியாக குறைந்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1279 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 50.55அடியாக இருந்தது.
இதில் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 200 கனஅடி வீதமும், வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் இன்னும் இரண்டொரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டிமலை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததையொட்டி பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியது. அணைக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஊட்டி மலையில் தற்போது மழை பெய்வது நின்றுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் படிப்படியாக குறைந்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1279 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 50.55அடியாக இருந்தது.
இதில் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 200 கனஅடி வீதமும், வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் இன்னும் இரண்டொரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X